செய்திகள்
மரணம்

ஆண்டிபட்டியில் பிறந்தநாளன்று நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2021-09-28 11:15 GMT   |   Update On 2021-09-28 11:15 GMT
ஆண்டிபட்டியில் பிறந்தநாள் அன்று நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகில் உள்ள கொத்தபட்டியை சேர்ந்த அமல்ராஜ் மகன் மதன்குமார்(20). இவர் தேக்கம்பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு மதன்குமார் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து வைகை அணை பிக்கப்டேம் பகுதியில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி நீரில் மூழ்கினார்.

உடன் சென்ற நண்பர்கள் அவரை போராடி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மோட்டார் சைக்கிள் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மதன்குமார் வரும்வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வைகை அணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்தநாள் அன்றே கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News