செய்திகள்
பேரளம் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து பெண்ணிடம் நகை பறிப்பு
பேரளம் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்:
நன்னிலம் அடுத்துள்ள புலவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள் ஜீவா (வயது 43). சம்பவத்தன்று ஜீவா திருக்கொட்டாரத்தில் உள்ள தனது தங்கை இந்துமதியை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது பேரளம் அருகே மருதுவாஞ்சேரி, அப்துல் கலாம் நகர் அருகே வந்தபோது பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் ஜீவாவை வழிமறித்து நிறுத்தினர். திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அதிர்ச்சியடைந்த ஜீவா திருடன்.. திருடன்.. என்று கூச்சலிட்டார். அதற்குள் அவர்கள் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அவர் பேரளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நன்னிலம் அடுத்துள்ள புலவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள் ஜீவா (வயது 43). சம்பவத்தன்று ஜீவா திருக்கொட்டாரத்தில் உள்ள தனது தங்கை இந்துமதியை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது பேரளம் அருகே மருதுவாஞ்சேரி, அப்துல் கலாம் நகர் அருகே வந்தபோது பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் ஜீவாவை வழிமறித்து நிறுத்தினர். திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அதிர்ச்சியடைந்த ஜீவா திருடன்.. திருடன்.. என்று கூச்சலிட்டார். அதற்குள் அவர்கள் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அவர் பேரளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.