செய்திகள்
பல்லடம் அருகே வளர்ச்சி திட்ட பணிகளை எம். எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

கரைப்புதூர் ஊராட்சியில் ரூ.53 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்கம்

Published On 2021-09-28 08:45 GMT   |   Update On 2021-09-28 08:45 GMT
அவரப்பாளையம் ஸ்ரீ கார்டன் பகுதியில் ரூ. 19 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கப்படுகிறது.
பல்லடம்:

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி எம். ஏ. நகரில் ரூ.26.72 லட்சம் மதிப்பிலான புதிய தார்சாலை அமைக்கும் பணி, மீனாம்பாறையில் ரூ.7.72 லட்சத்தில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, அவரப்பாளையம் ஸ்ரீ கார்டன் பகுதியில் ரூ. 19 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. 

பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன், கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கரைப்புதூர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News