செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா

Published On 2021-09-28 07:51 GMT   |   Update On 2021-09-28 07:51 GMT
நெல்லை மாவட்டத்தில் இன்று 7 சிறுவர்-சிறுமிகள் உள்பட மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

ஐகிரவுண்டு அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று 1,686 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாநகர பகுதியில் 8 பேர், அம்பையில் 3 பேர், வள்ளியூரில் 4 பேர் மற்றும் நாங்குநேரி, பாளை, பாப்பாக்குடி, ராதாபுரத்தில் தலா ஒருவர் என 19 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும், தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் வி.கே.புரத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், பாளையில் ஒரே வீட்டில் 9 வயது, 3 வயது சிறுவர்கள், வள்ளியூரில் 6 வயது சிறுவன், 4 வயது சிறுமி, பாப்பாக்குடியில் 7 வயது சிறுவன், என்.ஜி.ஓ. காலனியில் 3 வயது சிறுவன் என 7 பேர் சிறுவர்-சிறுமிகள் ஆவர்.

இதனால் நெல்லை மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,853 ஆக உயர்ந்தது.
Tags:    

Similar News