செய்திகள்
விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முருங்கைக்காய்களை படத்தில் காணலாம்.

வெள்ளகோவிலில் 5 டன் முருங்கைக்காய் விற்பனை

Published On 2021-09-27 11:07 GMT   |   Update On 2021-09-27 11:07 GMT
கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை கோவை, மதுரை, திருச்சி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவிலில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் விவசாயிகள் முருங்கைக் காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 30 விவசாயிகள் 5 டன் முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 

இதில் 15 வியாபாரிகள் கலந்துகொண்டு செடி முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.12 க்கும், மர முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.10க்கும், கரும்பு முருங்கைக்காய் ரூ.20-க்கும் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை கோவை, மதுரை, திருச்சி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். 
Tags:    

Similar News