செய்திகள்
பொதுமக்களிடம் கோரிக்கையை கேட்டறிந்த செல்வராஜ் எம்.எல்.ஏ.,

பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைத்த செல்வராஜ் எம்.எல்.ஏ.,

Published On 2021-09-27 09:48 GMT   |   Update On 2021-09-27 09:48 GMT
இன்று காலை திருப்பூர் காங்கயம் ரோடு பகுதியில் நடைபெற்று வந்த சுகாதார பணியினை செல்வராஜ் எம்.எல்.ஏ., நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த சுகாதார பணிகளை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் நேரடியாக சென்று ஆய்வு செய்து பணியை துரிதப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை திருப்பூர் காங்கயம் ரோடு பகுதியில் நடைபெற்று வந்த சுகாதார பணியினை நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதி மக்கள் எம்.எல்.ஏ.விடம் தங்கள் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க வேண்டும்.

சாக்கடை கால்வாயை அடிக்கடி தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். அதனை கனிவுடன் கேட்டுக்கொண்ட எம்.எல்.ஏ., உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்களின் கோரிக்கையின் படி இந்த பகுதியில் நல்ல தண்ணீர் பைப் அமைக்கவும் சுகாதார பணிகளை அடிக்கடி மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். 
Tags:    

Similar News