செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே சாலையில் வழுக்கி விழுந்த பெண் பலி
ஜோலார்பேட்டை அருகே சாலையில் வழுக்கி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமன், இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (வயது45). கூலி வேலை செய்து வந்தார். கடந்த வாரம் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் பெய்த கனமழையால் இவரது வீட்டின் எதிரே உள்ள சாலையில் பாசி படிந்து இருந்துள்ளது. கடந்த 24-ந் தேதி காலை வீட்டின் எதிரே உள்ள சாலையில் நடந்து சென்றபோது கோவிந்தம்மாள் வழுக்கி விழுந்து தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது உறவினர் சிவநாதன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.