செய்திகள்
நாமக்கல் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி
நாமக்கல் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி ஏரிக்கரையில் சாலையோரமாக 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 22-ந் தேதி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து இருக்கலாம் என்பது தெரியவந்து உள்ளது. எனவே அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் மீது மோதிய வாகனம் எங்கே? என நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.