செய்திகள்
சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை

சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு அமைச்சர்கள்-தலைவர்கள் மலர் தூவி மரியாதை

Published On 2021-09-27 06:42 GMT   |   Update On 2021-09-27 08:36 GMT
“தமிழர் தந்தை” சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை:

“தமிழர் தந்தை” சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாள் விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

சிலை முன்பு அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.



செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இயக்குனர் ஜெயசீலன், கூடுதல் இயக்குனர்கள் அம்பலவாணன், பாண்டியன், இணை இயக்குனர்கள் அன்புசோழன், எஸ்.செல்வராஜ், ராஜசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்துக்கு ‘மாலை முரசு’ நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், முன்னாள் எம்.பி.பாலகங்கா, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபிமனோகரன், சென்னை மாநகர முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஈ.சி.சேகர், இளஞ்செழியன், இஸ்மாயில் கனி, ராயபுரம் மனோ, வேல் ஆதித்தன், கன்னியப்பன், முருகவேல் பாபு, ஆலந்தூர் வெங்கட்ராமன்.



காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா, செல்வ பெருந்தகை, நிர்வாகிகள் தமிழ் செல்வன், எம்.எஸ். திரவியம், ஜி.கே.தாஸ், வக்கீல் நரேஷ்குமார், ஜேசுதாஸ், பி.ஆர்.பாண்டியன், சிவாஜிநாதன், ஜி.கே.தாஸ், சிவாலயா ஜாபர், ஜெயினுலாபுதீன், ஜலில்பாய், ரவி, சாய்கணேஷ்,

பா.ம.க. சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயராமன், நிர்வாகிகள் தயாளன், முஸ்தபா, வினோத் நாடார், ஏழுமலை, சிவக்குமார், மொசைக் ராஜ், பெருமாள் ராஜ், துரை ராஜ், வினோத்குமார், ஷேக் முகைதீன், ராமு.

த.மா.கா. நிர்வாகிகள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆர்.எஸ்.முத்து, சிவபால், ராமராஜ்

தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி, விசாகன் ராஜா, பாஸ்கர் பிரபு, பழனி, நந்தா, செந்தில், கணேஷ் , பாலாஜி, யுவராஜா, ஜோதி

ம.தி.மு.க. நிர்வாகிகள் ஜீவன், ராஜேந்திரன், கழக குமார், சுப்பிரமணி, ராமதாஸ், ஞானம், சே‌ஷன், விருகை ரவி, பீடா கடை ரவி, சுரேஷ் அப்பன்துரை, வில்பிரட், ரிலுவான்கான், எபினேசர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் செல்லத்துரை, இளங்கோ, புரசை அன்பு, தமிழேந்தி, ராஜேந்திரன், சீராளன், பச்சை, சிறுத்தை சீனு,

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அன்பு தென்னரசன், ராஜேந்திரன், அய்யனார், டால்பின் ரவி, அமிர்தராஜ், குமரன், ராஜேஷ், சதாசிவம், மகேஷ், தீபக், பாலாஜி

பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் சிவக்குமார், சந்தானம், ரமேஷ்குமார், வைகுண்ட ராஜா, வி.பி.ஐயர், புரசை நாகராஜ், ராபர்ட், கனகராஜ், சுமதி, உதயகுமார், பாலமுருகன், சுப்பிரமணியன், செல்வராஜ், ராஜ், முருகேச பாண்டியன், தர்மராஜ்,

சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் கண்ணன், தங்கமுத்து, சுப்பையா, ராஜேஷ்

நெல்லை-தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன், பொருளாளர் மாரிதங்கம், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் ஆர்.சிதம்பரம், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், பொருளாளர் மெல்வின், துணை செயலாளர் மார்க்கெட் ராஜா,

சென்னை வாழ் நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் பூமிநாதன், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மின்னல் ஸ்டீபன், மயிலை தொகுதி தலைவர் செல்லகுமார், சோழிங்கநல்லூர் தொகுதி தலைவர் முத்துகுமார்,

தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், நாடார் பொதுச்செயலாளர் ரவி, பொருளாளர் ஆடிட்டர் சிவராஜ், தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வீர குமார், நெல்லை நாடார் மெட்ரிக் பள்ளி தாளாளர் டி.ராஜ்குமார்,

அகில இந்திய நாடார் சங்க பேரமைப்பு தலைவர் தங்கராஜ், செயலாளர் சாமுவேல், சென்னை மண்டல நாடார் சங்க பேரமைப்பு தலைவர் பவர் சங்கர், வண்ணாரப்பேட்டை நாடார் சங்க தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர் ராஜேஷ், தமிழ்நாடு நாடார்கள் ஐக்கிய பேரமைப்பு மாநில தலைவர் செல்வா நாடார், மகளிரணி மீனா குமாரி, அகில உலக நாடார்கள் ஒத்துமை இணையம் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பொன்.செந்தில் வேலன், சென்னை கள்ளிக்குளம் நாடார் சங்க தலைவர் தங்கதுரை நாடார், செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் ஜுலியஸ்,

தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால், மாநில துணை தலைவர் எட்டுராஜ், மாவட்ட தலைவர் காமராஜ், நிர்வாகிகள் கணேஷ்குமார், மல்லிகார்ஜுன், ராஜன், தங்கதுரை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, நிர்வாகிகள் பாண்டியராஜன், எட்வர்ட், ஷேக் முகைதீன், ரீகன், மாரியப்பன், பஷீர் முகமது, பாலகிருஷ்ணன், ஹரிதாசன், நந்தகோபால்,

தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், செயலாளர் ஜெகதீசன், சவுந்தர் முருகன், மாநில துணை பொதுச் செயலாளர் பால முனியப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காயல் இளவரசு, ஆறுமுக நயினார், கணேசா,

டாக்டர் அமுதா பால கிருஷ்ணன், குமரி நற்பணி மன்ற செயல் தலைவர் சுகுமாறன், துணை தலைவர்கள் கிறிஸ்டியன், ரவிபெர்னர்ட், தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க வடசென்னை மாவட்ட தலைவர் தளபதி, திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் முல்லை ராஜா, தாய்-தந்தை சேவை மன்ற தலைவர் முல்லை பிரைட்டன், ஆதித்தனார் கல்லூரி வேதியியல் பழைய மாணவர் சங்க தலைவர் மரியசாமுவேல், தமிழ்நாடு ஆதித்தனார் மக்கள் பேரவை மாநில தலைவர் ஆர்.வி.கணேசன், பொதுச்செயலாளர் ஜெயகுமார், பொருளாளர் சுரேஷ்,

தமிழன்னை மாத இதழ் செய்தி ஆசிரியர் ரவி, ரஜினி மக்கள் மன்ற வடசென்னை மாவட்ட செயலாளர் சந்தானம், திருவேற்காடு நகர செயலாளர் பாஸ்கரன், ஜோதிடர் ஆசான் கீழஈரல் பண்டிதர் பச்சைராஜன்,

துறையூர் ஆர்ட்ஸ் அகடாமி ரகீம், டெல்லி கலை கலாசார மொழித்துறை துணைத்தலைவர் என்.ராஜா, மா. பொ.சி.பேரன் டாக்டர் செந்தில், அறக்கட்டளை நிறுவனர் பாஸ்கர், மாதவி பாஸ்கர், அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக நிறுவன தலைவர் முத்துராமன், சிங்க பெருமாள், வெறியாண்டி, சத்யா, முத்துகுமாரி, சத்ய நாராயணன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.


Tags:    

Similar News