தென்தாமரைகுளம் அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கொள்ளை
தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளம் அருகே உள்ள சித்தன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 42). இவர் தென்தாமரைகுளம் பகுதியில் சொந்தமாக நீர் சுத்திகரிப்பு நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நேற்று மாலை வழக்கம் போல் அலுவலக ஊழியர்கள் பணிகள் முடிந்து வீடு திரும்பினார்.
இன்று காலை அலுவலகத்தை திறக்க வந்த போது அலுவலகத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே இருந்த பீரோவில் இன்று ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 1லட்சம் ரொக்க பணம் மற்றும் ஒரு பவுன் தங்க நகை மாயமாகி இருந்தது . இதனால் அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து சப்இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ஜான் கென்னடி ஆகியோர் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் வைக்கப்பட்ட உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.