செய்திகள்
பப்பாளி சாகுபடி.

பப்பாளி சாகுபடியில் அதிக லாபம் ஈட்டும் குடிமங்கலம் விவசாயிகள்

Published On 2021-09-26 08:53 GMT   |   Update On 2021-09-26 08:53 GMT
பப்பாளி கன்றுகளை 7 அடிக்கு 7 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவு செய்ய வேண்டும். பப்பாளி சாகுபடியில் கூலிஆட்கள் தேவை குறைவாக உள்ளது.
குடிமங்கலம்:
 
குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் பப்பாளி பழங்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகளவு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கு சென்று பப்பாளிகளை அறுவடை செய்து கொள்கின்றனர்.

இதுகுறித்து பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயி கூறியதாவது:-

பப்பாளி ரகத்தின் வயது 22 மாதங்கள் ஆகும். குடிமங்கலம் பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். பப்பாளி கன்றுகளை 7 அடிக்கு 7 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவு செய்ய வேண்டும். பப்பாளி சாகுபடியில் கூலி ஆட்கள் தேவை குறைவாக உள்ளது. மேலும் மற்ற பயிர்களை போலவே பப்பாளியும் சொட்டுநீர் மூலம் சாகுபடி செய்யப்படுவதால் தண்ணீர் பிரச்சினைகள் குறைவாகவே உள்ளது.

பப்பாளி சாகுபடி செய்த 8 மாதங்களில் இருந்து அறுவடைக்கு தயாராகும். பப்பாளியை ஆண்டு முழுவதும் பயிரிடலாம் என்றாலும் பிப்ரவரி மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது. 

பப்பாளி செடியின் வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்காத அளவில் பார்த்து கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. பப்பாளியை 8 மாதங்களுக்கு பிறகு தொடர்ந்து 14 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். 

வியாபாரிகள் தோட்டத்திற்கு நேரடியாக வந்து பழங்களை அறுவடை செய்துகொள்வதால் விவசாயிகளுக்கு செலவு குறைவாகவே உள்ளது. பப்பாளி சாகுபடிக்கு செலவு குறைவு என்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் . இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News