செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே பனியன் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-09-26 08:53 GMT   |   Update On 2021-09-26 08:53 GMT
சக்திவேல் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
பல்லடம்:

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது58). இவரது மனைவி பானுமதி(55). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சக்திவேல் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அடிக்கடி கணவன்-மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட தகராறில்   மனமுடைந்த சக்திவேல் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியே சென்றபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News