செய்திகள்
கோப்புபடம்

உடுமலை பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-09-26 08:43 GMT   |   Update On 2021-09-26 08:43 GMT
பராமரிப்பு பணி காரணமாக உடுமலை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
உடுமலை:

உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்புகள் பணிகள் நடக்கிறது.

எனவே பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டுவேலான் பட்டி, வடுகபாளையம், பொட்டிகாம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, லிங்கமநாயக்கன் புதூர், சுங்காரமுடக்கு, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், ஆமந்தகடவு, சிக்கனூத்து ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News