செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

வெள்ளகோவிலில் முறையான ஆவணங்களின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்

Published On 2021-09-26 07:50 GMT   |   Update On 2021-09-26 07:50 GMT
ஆய்வில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கற்களை ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில், சேனாபதிபாளையம் அருகே நேற்று இரவு காங்கயம் தாசில்தார் சிவகாமி ஆய்வு பணி மேற்கொண்டு காங்கேயம் செல்வதற்காக வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை மடக்கி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது முறையான ஆவணங்கள் இல்லாமல் கற்களை ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த தாசில்தார், வெள்ளகோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
Tags:    

Similar News