செய்திகள்
தஞ்சையில் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
தஞ்சையில் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது37). இவர் தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பிய மணிகண்டன் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு இருந்தது. அப்போது அதில் இருந்த 2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.