ஆலங்குளம் அருகே நிலத்தகராறில் மோதல்- போலீஸ் ஏட்டு மீது வழக்கு
ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). இவர் ஊத்துமலையில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் மருதப்ப புரத்தைச் சேர்ந்த அவரது சகோதரர் அப்ரானந்தம் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, அப்ரானந்தம், அவரது மனைவி சுப்புலட்சுமி, மகள் உஷா ஆகிய 3 பேரையும் சரமாரியாக தாக்கி உள்ளார். பதிலுக்கு அப்ரானந்தமும் அவரது மனைவியும் சேர்த்து ஏட்டு கந்தசாமியை தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த அப்ரானந்தம், அவரது மனைவி சுப்பு லட்சுமி, மகள் உஷா ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த ஏட்டு கந்தசாமி தென்காசி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஏட்டு கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் அப்ரானந்தம், அவரது மனைவி, மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்ரானந்தம் கொடுத்த புகாரின் பேரில் ஏட்டு கந்தசாமி மீது வழக்குப்பதிவு செய்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடதேதி வருகிறார்கள்.