செய்திகள்
தேர்தல் பிரிவு கட்டிடப்பணியை கலெக்டர் ஆய்வு
பணிகளை விரைந்து முடித்து டிசம்பர் மாதத்திற்குள் ஒப்படைக்க வேண்டுமென பொதுப்பணித்துறை அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த தேர்தல் பிரிவு அலுவலகம் ரூ. 5கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
தரைத்தளம் மற்றும் மேல்தளம், அலுவலக அறை, ஆலோசனை கூட்டரங்குகள், ஓட்டுப்பதிவு எந்திரங்களை வைக்கும் 'ஸ்ட்ராங் ரூம்'கள் என கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கலெக்டர் வினீத் தேர்தல் பிரிவு அலுவலக பணியை ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளை விரைந்து முடித்து டிசம்பர் மாதத்திற்குள் ஒப்படைக்க வேண்டுமென பொதுப்பணித்துறை அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் முருகதாஸ் உடனிருந்தனர்.