செய்திகள்
அ.ம.மு.க. அமைப்பு செயலாளர் உள்பட 200 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
தென்காசி மாவட்ட அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான பொய்கை மாரியப்பன் தலைமையில் அக்கட்சியினர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆலோ சனை வழங்க சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சங்கரன்கோவில் வந்தார்.
முன்னதாக மதுரையில் இருந்து கார் மூலமாக சங்கரன்கோவில் வந்த அவருக்கு திருமங்கலம் டோல்கேட் அருகே மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் தென்காசி மாவட்ட அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான பொய்கை மாரியப்பன் தலைமையில் அக்கட்சியினர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
இதில் அ.ம.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பெருமையா பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பொன்னுசாமி, கடையநல்லூர் நகர செயலாளர் கமாலுதீன், செங்கோட்டை நகர செயலாளர் ராமசாமி உள்பட 200-க்கும் மேற்பட்டோர் அ.ம.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அப்போது மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆலோ சனை வழங்க சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சங்கரன்கோவில் வந்தார்.
முன்னதாக மதுரையில் இருந்து கார் மூலமாக சங்கரன்கோவில் வந்த அவருக்கு திருமங்கலம் டோல்கேட் அருகே மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் தென்காசி மாவட்ட அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான பொய்கை மாரியப்பன் தலைமையில் அக்கட்சியினர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
இதில் அ.ம.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பெருமையா பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பொன்னுசாமி, கடையநல்லூர் நகர செயலாளர் கமாலுதீன், செங்கோட்டை நகர செயலாளர் ராமசாமி உள்பட 200-க்கும் மேற்பட்டோர் அ.ம.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அப்போது மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.