செய்திகள்
தற்கொலை

கோவையில் 2-வது மனைவி பிரிந்து சென்றதால் வங்கி மேலாளர் தற்கொலை

Published On 2021-09-23 11:13 GMT   |   Update On 2021-09-23 11:13 GMT
கோவையில் 2-வது மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த வங்கி மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குனியமுத்தூர்:

கோவைப்புதூர் அருகே உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் ஜெய் ஸ்ரீகாந் (வயது 41). இவர் திருப்பூரில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்தார். இதனையடுத்து ஜெய்ஸ்ரீகாந் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்ரீஜா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். திருமணமான 15 நாளில் ஸ்ரீஜா, ஜெய்ஸ்ரீகாந்தை பிரிந்து சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் கடந்த சில நாட்களாக ஜெய் ஸ்ரீகாந் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ஜெய்ஸ்ரீகாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News