செய்திகள்
சாலையில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை படத்தில் காணலாம்.

வெள்ளகோவிலில் லாரி கவிழ்ந்து விபத்து

Published On 2021-09-23 08:41 GMT   |   Update On 2021-09-23 08:41 GMT
டிரைவர் ஜெயங்கொண்டத்தைசேர்ந்த ஆனந்த் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
வெள்ளகோவில்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து விறகு லோடு ஏற்றிக்கொண்டு பல்லடத்திற்கு லாரி ஒன்று சென்றது. திருப்பூர்  மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த ஓலப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.  

இதில் டிரைவர் ஜெயங்கொண்டத்தைசேர்ந்த ஆனந்த் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ராட்சத கிரேன் மூலம் லாரி நிலை நிறுத்தப்பட்டு சாலையில் சிதறி கிடந்த விறகுகள் அகற்றப்பட்டன. 
Tags:    

Similar News