செய்திகள்
கோப்புபடம்

இறைச்சி கடைகள் ஏல விவகாரம் - கலெக்டரிடம் புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் பரபரப்பு புகார்

Published On 2021-09-23 07:59 GMT   |   Update On 2021-09-23 07:59 GMT
14 கடைகள் ஏலம் விடப்பட்டு ஊராட்சிக்கு ரூ.4 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அவிநாசி:

அவிநாசி ஊராட்சி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சி பகுதிகளில் 17 இறைச்சி கடைகள் உள்ளன. ஆண்டுதோறும் இந்த கடைகள், ஏலம் விடப்படும். கடந்த மூன்றாண்டாக ஏலம் விடப்படாத நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் இந்தாண்டு ஏலம் விட்டனர். 

இதுகுறித்து ஊராட்சி தலைவர் கஸ்தூரிபிரியா கூறுகையில்:

14 கடைகள் ஏலம் விடப்பட்டு ஊராட்சிக்கு ரூ.4 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எஞ்சிய 3 கடைகளை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. ஏலம் முடிந்த பின் ஊராட்சி அனுமதியின்றி 2 இறைச்சி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கலெக்டர், பி.டி.ஓ. ஆகியோருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
Tags:    

Similar News