செய்திகள்
அவனியாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை, பொருட்கள் கொள்ளை
மதுரை அவனியாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவனியாபுரம்:
மதுரை அவனியாபுரம் முல்லை நகர், பிரதான வீதியில் வசிப்பவர் ஜெகநாதன். இவரது மனைவி சித்ராதேவி.
கணவர் உடல் நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் இருப்பதால் அவரை பார்த்துக்கொள்ள சித்ராதேவி கடந்த 20-ந் தேதி இரவு சென்றார்.
மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தோடு, அரை பவுன் மோதிரம், 2 பவுன் செயின், ஒரு பவுன் வைரத்தோடு, ஒரு கிலோ வெள்ளிக்குத்துவிளக்கு, வெள்ளி கொலுசு, டி.வி. உள்ளிட்ட பொருள்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து கொடுத்த அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மதுரை அவனியாபுரம் முல்லை நகர், பிரதான வீதியில் வசிப்பவர் ஜெகநாதன். இவரது மனைவி சித்ராதேவி.
கணவர் உடல் நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் இருப்பதால் அவரை பார்த்துக்கொள்ள சித்ராதேவி கடந்த 20-ந் தேதி இரவு சென்றார்.
மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தோடு, அரை பவுன் மோதிரம், 2 பவுன் செயின், ஒரு பவுன் வைரத்தோடு, ஒரு கிலோ வெள்ளிக்குத்துவிளக்கு, வெள்ளி கொலுசு, டி.வி. உள்ளிட்ட பொருள்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து கொடுத்த அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.