செய்திகள்
பல்லடம் அருகே சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம்
முகாமை பல்லடம் தாசில்தார் தேவராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் மற்றும் இச்சிப்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட சிறு,குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம் தோட்டக்கலை துறை மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் நடைபெற்றது.
இதில் கோடங்கிபாளையத்தில் 21 விவசாயிகளும், இச்சிப்பட்டி ஊராட்சியில்11விவசாயிகளும் தேர்வு செய்யப்பட்டு சிறு, குறு, விவசாயிகளுக்கான சான்று அளிக்கப்பட்டது.
முகாமை பல்லடம் தாசில்தார் தேவராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிறப்பு முகாமில் பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெரீனா பேகம் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.