செய்திகள்
கொரோனா தடுப்பூசி

2 நாட்களுக்கு பிறகு 5.28 லட்சம் தடுப்பூசி இன்று சென்னை வருகிறது

Published On 2021-09-21 08:43 GMT   |   Update On 2021-09-21 08:43 GMT
கோவேக்சின் 1 லட்சத்து 28 ஆயிரம் தடுப்பூசிகளும், 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் விமானம் மூலம் இன்று வருகின்றன.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வந்த நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு தடுப்பூசிகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் 2 நாட்களாக முகாம்கள் நடைபெறவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி இல்லாததால் ஊசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 5.28 லட்சம் தடுப்பூசிகள் இன்று மாலை சென்னை வருகிறது. கோவேக்சின் 1 லட்சத்து 28 ஆயிரம் தடுப்பூசிகளும், 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் விமானம் மூலம் வருகின்றன.

இதையடுத்து தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது. நாளை முதல் மீண்டும் முகாம்கள் நடைபெறுகின்றன.

Tags:    

Similar News