செய்திகள்
கோப்புபடம்

உடுமலை தாலுகாவில் 19 கிராம நிர்வாக அதிகாரிகள் இடமாற்றம்

Published On 2021-09-21 07:00 GMT   |   Update On 2021-09-21 07:00 GMT
உடுமலை தாலுகாவில் 19 கிராம நிர்வாக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
உடுமலை:

உடுமலை தாலுகாவில் பணியாற்றி வரும் வி.ஏ.ஓ., க்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், பெரியகோட்டை கிராமத்திற்கு கலைவாணி, தளி-1 ராஜா, சோமவாரபட்டி - பொன்னுசாமி, வடபூதிநத்தம் கிராமத்திற்கு - பிரகாஷ், தேவனூர்புதூர் - சண்முகநாதன், இலுப்ப நகரம் - பார்த்தசாரதி, எலையமுத்தூர் - பால்வாசகம், ஆலாம்பாளையம் - ரங்கநாயகி, ராகல்பாவி - பிருந்தாதேவி, புக்குளம் - கோகிலா, ஆண்டியகவுண்டனூர் - 2 ரேவதி, விருகல்பட்டி - லீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல் ஜிலேபிநாயக்கன்பாளையம் - சிவப்பிரகாசம், பூலாங்கிணர் - கிருத்திகா, கொங்கல்நகரம் - மயில்சாமி, தென்பூதிநத்தம் - அருள்ராஜ், பூளவாடி- வைரமுத்து, ஆமந்தகடவு- எழிலரசன், கல்லாபுரம் வி.ஏ.ஓ.,வாக சரவணன் என 19 பேர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News