செய்திகள்
விபத்து பலி

கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2021-09-20 11:58 GMT   |   Update On 2021-09-20 11:58 GMT
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் அருகே உள்ள கோடங்கிபட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் முத்தன் (வயது 70), கூலித்தொழிலாளி. இவர் ஈசநத்தம் கோடாங்கிபட்டி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதினார். இதில், கீழே விழுந்த முத்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் முத்தனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News