செய்திகள்
தற்கொலை

மொரப்பூர் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை

Published On 2021-09-20 08:35 GMT   |   Update On 2021-09-20 08:35 GMT
மொரப்பூர் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர்:

மொரப்பூர் அருகே உள்ள குருபரஅள்ளி ஆலங்கரை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 33). லாரி டிரைவர். இவரது மனைவி சுகந்தி (28) இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுகந்தி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Tags:    

Similar News