செய்திகள்
கோப்பு படம்

நாட்டறம்பள்ளி பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு

Published On 2021-09-19 10:23 GMT   |   Update On 2021-09-19 10:23 GMT
நாட்றம்பள்ளி பகுதியில் நடைபெற்ற ஒரு நாள் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் அமர்குஸ்வாஹா இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

ஜோலார்பேட்டை:

தமிழகம் முழுவதும் இரண்டாம்கட்ட மாபெரும் ஒரு நாள் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஸ்வாஹா தலைமையில் இன்று காலை நாட்றம்பள்ளி பகுதியில் நடைபெற்று வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அதிபெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் துவக்க பள்ளி, ஜங்கலாபுரம் ஊராட்சி ஒன்றியம் துவக்க பள்ளி மற்றும் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் நடைப்பெற்று வரும் ஒரு நாள் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இதனை இன்று காலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஸ்வாஹா தலைமையில் திடிரென ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது நாட்றம்பள்ளி தாலுக்கா தாசில்தார் பூங்கொடி பேரூராட்சி செயல் அலுவலர் மாலா அரசு டாக்டர் கிரு‌ஷகா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சுகாதார செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News