செய்திகள்
பெரியார் விருது.

பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2021-09-19 09:01 GMT   |   Update On 2021-09-19 09:01 GMT
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை கவுரவிக்கும் வகையில்‘ சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது கடந்த 1995 - ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியார்விருது பெற தகுதியான நபர்கள் அக்டோபர் 31 - ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை கவுரவிக்கும் வகையில் ‘ சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது கடந்த 1995 - ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. 

ஆகவே 2021 - ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார்விருது‘ வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருதுக்கு தகுதியான நபர் தமிழக முதல்வரால் தேர்வு செய்யப்படுவார். எனவே மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் ஆகிய தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் சுய விவரம், முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து அக்டோபர் 31 - ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தை 0421-2999130 என்ற எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News