செய்திகள்
விபத்து பலி

கடமலைக்குண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து காய்கறி வியாபாரி பலி

Published On 2021-09-19 08:13 GMT   |   Update On 2021-09-19 08:13 GMT
கடமலைக்குண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து காய்கறி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடமலைக்குண்டு:

கடமலைக்குண்டு அருகே உள்ள வெம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). இவருடைய மனைவி கீதா (27). இவர்களுக்கு ஸ்ரீவர்த்தினி (5), யுவா (3) என 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமாரும், கீதாவும் தினமும் ஆட்டோவில் காய்கறிகளை எடுத்துச்சென்று தேனி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் காலை செந்திலும், அவரது மனைவியும் வழக்கம்போல காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு வெம்பூர் நோக்கி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் செந்தில்குமாரின் குழந்தைகள் மற்றும் அவரது தாயார் புஷ்பலீலா (65) ஆகியோரும் வந்தனர். ஆட்டோவை செந்தில்குமார் ஓட்டினார். வழியில் கடமலைக்குண்டுவை கடந்து சிதம்பரம்விலக்கு அருகே வந்த போது திடீரென ஆட்டோ நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் செந்தில்குமார் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கீதா, ஸ்ரீவர்த்தினி, யுவா, புஷ்பலீலா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடும்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செந்தில்குமாரின் உடல் அங்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News