செய்திகள்
தபால்துறை.

தபால்துறை குறைகேட்பு கூட்டம் - 29ந்தேதி நடக்கிறது

Published On 2021-09-19 07:42 GMT   |   Update On 2021-09-19 07:42 GMT
காப்பீடு புகார் எனில் காப்பீடு எண், பெயர், முகவரி ஆகியவை கட்டாயம் கடிதத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
திருப்பூர்:

தபால்துறை குறைகேட்பு கூட்டம் திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. தபால் சேவையை பற்றி புகார் தெரிவிக்க விரும்புவோர், தபால் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம் - 641 601’ என்ற முகவரிக்கு கடிதம் மேல், ‘DAK ADALAT CASE’ என குறிப்பிட்டு வருகிற 24-ந்தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

காப்பீடு புகார் எனில் காப்பீடு எண், பெயர், முகவரி ஆகியவை கட்டாயம் கடித த்தில் இடம் பெற்றிருக்க வேண்டும் என திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News