செய்திகள்
கட்டிட பணி நடைபெற்று வரும் காட்சி.

திருப்பூரில் தேர்தல் பிரிவு கட்டிட பணிகள் தீவிரம்

Published On 2021-09-19 07:31 GMT   |   Update On 2021-09-19 07:31 GMT
தேர்தல் பிரிவு அலுவலர்கள் அறை உட்பட இரண்டு தளங்களுடன் கூடிய தேர்தல் பிரிவு கட்டிடம் கட்டப்படுகிறது.
திருப்பூர்:

இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி  மாவட்டம் தோறும் தேர்தல் பிரிவு கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான  மாவட்ட தேர்தல் பிரிவு கட்டுமான பணி நடந்து வருகிறது.

பாதுகாப்பான ‘ஸ்ட்ராங் ரூம்‘கள், கூட்டரங்குகள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் அறை உட்பட  இரண்டு தளங்களுடன் கூடிய தேர்தல் பிரிவு கட்டிடம் கட்டப்படுகிறது.

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வைக்கும் ‘ஸ்ட்ராங் ரூம்‘களுடன் கூடிய  தேர்தல் பிரிவு அலுவலக வளாகம் கட்டும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News