செய்திகள்
நீட் தேர்வு எழுதிய மாணவி மாயமான வழக்கில் திருப்பம்
நீட் தேர்வு எழுதிய மாணவி மாயமானது தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த சின்ன அரியாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்பாண்டியன். டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். இவரது மகள் சுவேதா (வயது 19). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு கடந்தாண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியின் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்.
கடந்த வாரம், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் சுவேதா நீட் தேர்வு எழுதினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் உள்ள தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற சுவேதா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் பல இடங்களில் தேடினர்.
எனினும் அவர் கிடைக்காததால் இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பெற்று தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சுவேதா நேற்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்தார். சுவேதாவுக்கு சென்னை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரின் மகன் டேனியல் (26) என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
டேனியல் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் டேனியல் சென்னையில் இருந்து தனது டூவீலரில் நாமகிரிப்பேட்டைக்கு வந்துள்ளார். பின்னர் சுவேதாவை அழைத்துக் கொண்டு தேனியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவர்கள் பேளுக்குறிச்சி முருகன் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டு பின்னர் தேனி மாவட்டம் சென்று உத்தமபாளையத்தில் நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர். இதனிடையே சுவேதாவை போலீசார் தேடுவதை அறிந்துகொண்டதால் நேற்று காலை இருவரும் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த சின்ன அரியாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்பாண்டியன். டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். இவரது மகள் சுவேதா (வயது 19). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு கடந்தாண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியின் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்.
கடந்த வாரம், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் சுவேதா நீட் தேர்வு எழுதினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் உள்ள தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற சுவேதா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் பல இடங்களில் தேடினர்.
எனினும் அவர் கிடைக்காததால் இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பெற்று தீவிரமாக தேடி வந்தனர்.
சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்தபோது சுவேதா துப்பட்டாவைக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு வாலிபர் ஒருவருடன் பைக்கில் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
டேனியல் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் டேனியல் சென்னையில் இருந்து தனது டூவீலரில் நாமகிரிப்பேட்டைக்கு வந்துள்ளார். பின்னர் சுவேதாவை அழைத்துக் கொண்டு தேனியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவர்கள் பேளுக்குறிச்சி முருகன் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டு பின்னர் தேனி மாவட்டம் சென்று உத்தமபாளையத்தில் நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர். இதனிடையே சுவேதாவை போலீசார் தேடுவதை அறிந்துகொண்டதால் நேற்று காலை இருவரும் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து காதல் ஜோடியை அழைத்து வருவதற்கு நாமகிரிபேட்டையில் இருந்து தனிப்படை போலீசார் தேனிக்கு விரைந்தனர். அங்கு காதல் ஜோடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்... ஞாயிற்றுக்கிழமை கூடுதல் கட்டுப்பாடு- கோவையில் கடைகள், தியேட்டர்கள் மூடல்