செய்திகள்
கோப்புபடம்.

காதலியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய டிரைவர் கைது

Published On 2021-09-17 10:21 GMT   |   Update On 2021-09-17 10:21 GMT
காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அந்த பெண் சாரதியுடன் பழகுவதை நிறுத்தி கொண்டார்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரியகோட்டை பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் சாரதி (24). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் சாரதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி இருவரும் பல்வேறு இடங்களில் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை சாரதி அந்தப் பெண்ணிற்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். 

இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அந்த பெண் சாரதியுடன் பழகுவதை நிறுத்தி கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சாரதி அந்த பெண்ணிடம் நீ என்னுடன் வந்து விடு, இல்லை என்றால் நாம் தனியாக இருந்த ஆபாச படங்களை வெளியிட்டு வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து உடுமலை மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News