செய்திகள்
வேலைக்கு சென்ற தனியார் நிறுவன ஊழியர் மாயம்
வேலைக்கு சென்ற தனியார் நிறுவன ஊழியர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
மேலப்பாளையம் பிஸ்மிநகரை சேர்ந்தவர் ரசூல்மைதீன் (வயது 40). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் பீடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்த அவர் பின்னர் விடுமுறை முடிந்து மீண்டும் வேலூருக்கு சென்றார். கடந்த சில நாட்களாக அவரிடமிருந்து போன் வரவில்லை என தெரிகிறது. அவரை தொடர்பு கொண்டால் அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசில் அவரது மனைவி சபீனா புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து ரசூல்மைதீனை போலீசார் தேடி வருகின்றனர்.