செய்திகள்
தொல் திருமாவளவன்

9 மாவட்டங்களுக்கு விடுதலை சிறுத்தை பொறுப்பாளர்கள் நியமனம்- தொல்.திருமாவளவன்

Published On 2021-09-17 07:26 GMT   |   Update On 2021-09-17 07:26 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நீல சந்திரகுமார், செங்கல்பட்டு மையம் - வன்னி அரசு, செங்கல்பட்டு தெற்கு - எழில் கரோலின், செங்கல்பட்டு கிழக்கு - இளஞ்சேகுவாரா நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள கட்சி தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனு பெறுவதற்கு மேலிடப் பொறுப்பாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி நியமித்துள்ளது.

9 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நீல சந்திரகுமார், செங்கல்பட்டு மையம் - வன்னி அரசு, செங்கல்பட்டு தெற்கு - எழில் கரோலின், செங்கல்பட்டு கிழக்கு - இளஞ்சேகுவாரா, விழுப்புரம் கிழக்கு - புதுவை பாவாணன், விழுப்புரம் வடக்கு - விடுதலை செழியன்.

கள்ளக்குறிச்சி - இரா.கிட்டு, நாவரசன், திருநெல்வேலி - கனியமுதன், ஐகோர்ட் பாண்டியன், தென்காசி - கலைவேந்தன், தமிழ் இனியன், வேலூர் - பிலிப், நற்குமரன், ராணிப்பேட்டை கிழக்கு - பார்வேந்தன், ராணிப்பேட்டை வடக்கு - தகடூர் தமிழ்செல்வன்.

திருப்பத்தூர் தெற்கு - நந்தன், திருப்பத்தூர் வடக்கு - சிவசெல்ல பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விருப்ப மனுவுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

Tags:    

Similar News