செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கை - ஓட்டல்களுக்கு அதிரடி உத்தரவு
அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கடைகளில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பேசியதாவது:
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஓட்டல் உரிமையாளர் உரிய கவனத்துடன் அக்கறையுடன் செயல்பட வேண்டும். கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.
ஊழியர்கள் முக கவசம் அணிதல் கட்டாயம். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கி, சானிடைசர் பயன்பாடு மற்றும் அரசு வழிகாட்டுதல் படி சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை கண்காணிக்க வேண்டும்.
அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கடைகளில் அமைக்க வேண்டும் என்றார்.