செய்திகள்
காய்ச்சல் பரிசோதனை

ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்

Published On 2021-09-17 03:06 GMT   |   Update On 2021-09-17 03:06 GMT
தென்காசி மாவட்டம் மாறாந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 52 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
தென்காசி:

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் புதிதாக உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவர்களுக்கும், நீலகிரியில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 3 மாணவர்களுக்கும், அரியலூரில் பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவருக்கும் தொற்று உறுதியானது.

இந்தநிலையில், தென்காசி மாவட்டம் மாறாந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்றுமுன்தினம் 22 மாணவ, மாணவியருக்கும், நேற்று 30 பேருக்கும் திடீர் காய்ச்சல் ஏற்பட்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அந்த மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இந்த பரிசோதனையில் முடிவுகள் வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News