மதுரை அருகே கொத்தனார் உள்பட 3 பேர் தற்கொலை
மதுரை:
மதுரை புது ராமநாதபுரம் ரோடு மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் கண்ணன் (வயது 21). கொத்தனாரான இவருக்கு வலிப்பு நோய் உள்ளது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த கண்ணன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தெப்பகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேரு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (36). இவரது மனைவி பரமேஸ்வரி.
பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் உண்டாம். இளைப்பு நோயும் இருந்தது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாலமுருகன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கீழ வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் நசீம் (32). இவருக்கு கடந்த சில மாதங்களாக பண நெருக்கடி அதிகரித்து வந்தது. எனவே குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நசீம் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி நசீம் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.