செய்திகள்
தற்கொலை

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை- குழந்தைகள் தவிப்பு

Published On 2021-09-16 10:08 GMT   |   Update On 2021-09-16 10:08 GMT
காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை பெத்திகுட்டையை சேர்ந்தவர் மோகன் (வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி துளசியம்மாள் (23). இவர்கள் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் மோகனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து துளசியம்மாளிடம் பணம் கேட்டு வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று மோகன் மீண்டும் குடிபோதையில் பணம் கேட்டு தகராறில் ஈடுப்பட்டார். இதனால் மனவேதனை அடைந்த துளசியம்மாள் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News