செய்திகள்
அன்னதான திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

3 கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2021-09-16 05:51 GMT   |   Update On 2021-09-16 06:26 GMT
சமயபுரம் கோவிலில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 3 வேளை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
சென்னை:

திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் 3 வேளை அன்னதானம் தரும் திட்டத்தை தலைமைச்செயலகத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் பங்கேற்றனர்.

ஏற்கனவே உள்ள ஸ்ரீரங்கம், பழனி கோவில்களையடுத்து 3 வேளை அன்னதான திட்டம் நடைபெறும் கோவில்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

சமயபுரம் கோவிலில் தலைவாழை இலையில் ஜாங்கிரி, சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், வடை, பாயாசம், ரசம், மோர் வழங்கப்பட்டது.



சமயபுரம் கோவிலில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 3 வேளை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் வரை நாளை முதல் கோவில்களில் அன்னதானம் பார்சலில் வழங்கப்படும்.


Tags:    

Similar News