செய்திகள்
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 30-ந்தேதி முடிவு: அமைச்சர் தகவல்
பள்ளிகள் திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
திருச்சி:
திருச்சியில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்த பள்ளிக்கல்வித்துறையின் அறிக்கை இன்று முதல்- அமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்த துறை சார்ந்த மூத்த அதிகாரிகளின் முடிவுகளும் முதல்வருக்கு தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்.
வரும் 30-ந்தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் அளிக்கும் அறிக்கை மற்றும் மருத்துவ நிபுணர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை நிபுணர்கள் கொடுக்கும் ஆலோசனையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
திருச்சியில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்த பள்ளிக்கல்வித்துறையின் அறிக்கை இன்று முதல்- அமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
பள்ளிகள் திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் சிலர் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும், மற்றும் சிலர் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
வரும் 30-ந்தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் அளிக்கும் அறிக்கை மற்றும் மருத்துவ நிபுணர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை நிபுணர்கள் கொடுக்கும் ஆலோசனையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... கூட்டணி கட்சிகளுடன் சுமூக முடிவு காண வேண்டும்- துரைமுருகன் வேண்டுகோள்