செய்திகள்
லாரி மோதி கோழிப்பண்ணை தொழிலாளி பலி
திலக்ராஜ் கரடிவாவியில் உள்ளகோழிபண்ணைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் பல்லடம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தார்.
பல்லடம்:
பல்லடத்தில் உள்ள மேற்கு பல்லடம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் திலகராஜ்(வயது28). இவருக்கு லாவண்யா(24) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் உள்ள கோழிபண்ணைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் பல்லடம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தார்.பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் எலந்தகுட்டை அருகே வரும்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த திலகராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் திலக்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது மனைவி லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.