செய்திகள்
ஜிகே வாசன்

நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை- ஜி.கே.வாசன் இரங்கல்

Published On 2021-09-14 07:23 GMT   |   Update On 2021-09-14 07:23 GMT
நீட் தேர்வு சம்பந்தமாக இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் தொடர்வது துரதிருஷ்டவசமானது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. 10-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவி கனிமொழி நீட் தேர்வு எழுதிய பிறகு மதிப்பெண்ணை எண்ணி பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீட் தேர்வு சம்பந்தமாக இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் தொடர்வது துரதிருஷ்டவசமானது. இந்நிலை நீடிக்க கூடாது. உயிரிழந்த மாணவியின் இழப்பு அவரது பெற்றோருக்கு ஈடு கொடுக்க முடியாதது. மாணவி கனிமொழியின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News