செய்திகள்
கொரோனா வைரஸ்

வெள்ளகோவிலில் 11 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-09-12 09:37 GMT   |   Update On 2021-09-12 09:37 GMT
தொற்று பாதித்தவர்களுக்கு வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் வெள்ளகோவில் கே.பி.சி நகர், ஊஞ்சவலசு, சிவநாதபுரம், சாமிகாடு, தண்ணீர் பந்தல், காமராஜபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அவர்களுக்கு வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும்  கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News