செய்திகள்
திருமணமாகாத ஏக்கத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
திருமணமாகாத ஏக்கத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் போஸ்(வயது 35). ஆந்திரா மாநிலத்தில் இனிப்பு கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வந்திருந்தார். கடந்த 2 மாதமாக ஊரில் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில் திருமணம் முடித்து வைக்க சொல்லி தனது தாய் ராமலட்சுமியை வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
திருமணத்துக்கு காலதாமதம் ஆகி வந்ததால், மனம் உடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த தலை சாயத்தை (ஹேர் டை) மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் போஸ்(வயது 35). ஆந்திரா மாநிலத்தில் இனிப்பு கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வந்திருந்தார். கடந்த 2 மாதமாக ஊரில் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில் திருமணம் முடித்து வைக்க சொல்லி தனது தாய் ராமலட்சுமியை வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
திருமணத்துக்கு காலதாமதம் ஆகி வந்ததால், மனம் உடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த தலை சாயத்தை (ஹேர் டை) மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.