செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூரில் போலீஸ்காரரை தாக்கிய 4 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

Published On 2021-09-09 11:03 GMT   |   Update On 2021-09-09 11:03 GMT
ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து போலீஸ்காரரை தாக்கியதாக கூறப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர்கள் சந்திரசேகரன் (வயது 33) மற்றும் மாதேஸ்வரன் (32).

இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று இரவு பாண்டியன் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றனர். அப்போது பாண்டியன் நகர் பகுதியில் 4 பேர் மதுபோதையில் நின்று கொண்டிருந்தனர். 

அவர்களிடம் போலீசார் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்று விசாரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் சந்திரசேகரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.  

விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த யாசர் (33), சரண்ராஜ் (33) அவருடைய தம்பி சரத்குமார் (25) மற்றும் ஜெபாஸ்டியான் (41) என்பது தெரியவந்தது. 

இதையடுத்து 4 பேர் மீதும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Tags:    

Similar News