செய்திகள்
சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம்
சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.
சென்னை:
கொரோனா தொற்று காரணமாக சென்னை மாவட்டத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்பு பயிற்சி மையங்கள் மூடப்பட்டது. இங்கு படித்த மாணவர்கள் கல்வி கற்க இயலாத நிலை நிலவியது.
இந்த நிலையில் சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.
கடந்த 1-ந் தேதி முதல் திங்கட்கிழமை - வெள்ளிக்கிழமை வரை காலை 11 மணி முதல் 11.30 மணி வரை பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. எனவே சென்னை மாவட்டத்தில் இயங்கும் சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக சென்னை மாவட்டத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்பு பயிற்சி மையங்கள் மூடப்பட்டது. இங்கு படித்த மாணவர்கள் கல்வி கற்க இயலாத நிலை நிலவியது.
இந்த நிலையில் சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.
கடந்த 1-ந் தேதி முதல் திங்கட்கிழமை - வெள்ளிக்கிழமை வரை காலை 11 மணி முதல் 11.30 மணி வரை பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. எனவே சென்னை மாவட்டத்தில் இயங்கும் சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.