செய்திகள்
மெட்ரோ ரெயில்

மெட்ரோ ரெயிலில் நேற்று 1.2 லட்சம் பேர் பயணம்

Published On 2021-09-09 09:08 GMT   |   Update On 2021-09-09 09:08 GMT
கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். அதன் பின்னர் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
சென்னை:

கொரோனா தொற்று பரவலுக்கு இடையே மெட்ரோ ரெயில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி இயக்கப்படுகிறது.

கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். அதன் பின்னர் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 30, 40, 50 ஆயிரம் என அதிகரித்து கடந்த மாதத்தில் 80 ஆயிரம் பேர் அதிகபட்சமாக பயணம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று திடீரென பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 1 லட்சத்து 2 ஆயிரத்து 855 பேர் பயணம் செய்திருப்பதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News