செய்திகள்
அமைச்சர் நமச்சிவாயம் குடும்பத்தினர் மீது முதலமைச்சரிடம் புகார் தெரிவித்த பேரன்
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து அமைச்சர் நமச்சிவாயத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அண்ணன் ஆதிகேசவன் மகள் வசந்தியை நமச்சிவாயம் திருமணம் செய்துள்ளார். இதனால் அமைச்சர் நமச்சிவாயம், முதல்- அமைச்சர் ரங்கசாமியின் மருமகன் ஆவார்.
14 ஆண்டுக்கு பிறகு நேற்று வில்லியனூர் மணவெளியில் உள்ள அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார்.
பின்னர் ரங்கசாமி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து அமைச்சர் நமச்சிவாயத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். தாத்தா நீண்டகாலத்துக்கு பின் வீட்டுக்கு வந்ததை கண்டு பேரன் மகிழ்ச்சியடைந்தார். தாத்தாவை ஒவ்வொரு அறையாக அழைத்து சென்று வீட்டை சுற்றிக்காட்டினான்.
தனது அறைக்கு அழைத்து சென்று விளையாட்டு பொருட்களை தாத்தாவிடம் காட்டினான். தொடர்ந்து ரங்கசாமி, நமச்சிவாயம் வீட்டிலேயே உணவருந்தினார். உணவருந்தும் போது தாத்தா ரங்கசாமியிடம் தனது பெற்றோரை பற்றி பேரன் சிவஹரி புகார் செய்தான். 2 ஆண்டாக என்னை எங்கேயும் அனுப்புவதில்லை. விளையாடுவதற்கு கூட வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை என தெரிவித்தான்.
அவனை தனது மடியில் வைத்து ரங்கசாமி கொஞ்சி மகிழ்ந்தார். சுமார் 45 நிமிடம் அமைச்சர் நமச்சிவாயத்தின் வீட்டில் பேரனுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி செலவழித்தார்.
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாளையொட்டி அமைச்சர் நமச்சிவாயம் புதுவை முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு சென்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அண்ணன் ஆதிகேசவன் மகள் வசந்தியை நமச்சிவாயம் திருமணம் செய்துள்ளார். இதனால் அமைச்சர் நமச்சிவாயம், முதல்- அமைச்சர் ரங்கசாமியின் மருமகன் ஆவார்.
14 ஆண்டுக்கு பிறகு நேற்று வில்லியனூர் மணவெளியில் உள்ள அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார்.
நமச்சிவாயம், மனைவி வசந்தி, பேரன் சிவஹரி ஆகியோர் முதல்-அமைச்சரை வரவேற்று அழைத்து சென்றனர்.
தனது அறைக்கு அழைத்து சென்று விளையாட்டு பொருட்களை தாத்தாவிடம் காட்டினான். தொடர்ந்து ரங்கசாமி, நமச்சிவாயம் வீட்டிலேயே உணவருந்தினார். உணவருந்தும் போது தாத்தா ரங்கசாமியிடம் தனது பெற்றோரை பற்றி பேரன் சிவஹரி புகார் செய்தான். 2 ஆண்டாக என்னை எங்கேயும் அனுப்புவதில்லை. விளையாடுவதற்கு கூட வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை என தெரிவித்தான்.
அவனை தனது மடியில் வைத்து ரங்கசாமி கொஞ்சி மகிழ்ந்தார். சுமார் 45 நிமிடம் அமைச்சர் நமச்சிவாயத்தின் வீட்டில் பேரனுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி செலவழித்தார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பிய முதல்-அமைச்சர் ரங்கசாமியை, கார் வரை வந்து அமைச்சர் நமச்சிவாயம், அவரது மனைவி வசந்தி, பேரன் சிவஹரி வழியனுப்பி வைத்தனர்.
இதையும் படியுங்கள்... உத்தரபிரதேசத்தில் பிரியங்கா 2-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம்